JeYaRaJ
Wednesday, November 24, 2010
அன்று ,,
நானும் காதல் செய்தேன்
நீயும் காதல் செய்தாய் ....
இன்று ,,
நாம் வாழ்கிறோம் ...
நீ உன் கணவனோடு ,
நான் உன் நினைவோடு !!
என் கவிதைகளை நேசித்த நீ ,
காதலை மட்டும் யோசிப்பது ஏனோ !!!
என்
கவிதைகள்தான் கற்பனையானது !!!!
காதல் நிஜமானது !!
காத்திருப்பு !!
நீ
வந்தபின்
உன்னுடன் பேசியதைவிட
உனக்காக
காத்திருக்கும் போது
உன்னுடன் பேசியதுதான்
அதிகம்
காதல்!
அதிகம் பேசும்
வாயாடியான நீ
ஊமையாகிப் போனாய்...!
ஊமையான நான்
உளறிக் கொட்டும்
பைத்தியமாகிப் போனேன்!
நம்மை மாற்றிய
காதல் மட்டும்
இன்னும்
அப்படியே
துளியும் மாறாமல்!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)